Thursday, July 29, 2010

இளந்தமிழ் 8 ஆவது இதழ்

அகதிக் கப்பல் கனடியத் தரைதட்டுமா?
      கனடிய அரசு இரக்கங்காட்டுமா?

Recovery

Friday, July 23, 2010

சீமான், வை.கோ, நெடுமாறன் கைது தொடர்பாக: மா.க ஈழவேந்தன் கண்டனம்!

சீமான், வை.கோ, நெடுமாறன் கைது தொடர்பாக: நாடுகடந்த தமிழுPழ அரசு பனடாப் போராளர் ஈழவேந்தன் கண்டனம்!
செந்தமிழ்ச் சீமானையும், எம் தலைவர் பிரபாகரனை யும் தமிழகத்தில் காத்து வந்த கொள்கைக் குன்று நின்றசீர் நெடுமாறனையும், வையம் ஏற்றும் வைகோ வையும் மற்றும் தியாகத் தழும்பேறிய தொண்டர்களையும் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்வத னால் செந்தமிழ் இனத்தைச் சீரழிக்கலாமென்றோ தமிழினத்தின் விடுதலை வேட்கையைத் திசை திருப்பலாம் என்றோ கருதி தமிழக அரசு இவர் களைத் துன்புறுத்தி எதையும் நிலைநாட்டலாம் என்று கருதுவார்களாயின் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் கள் என்பதுதான் பொருள். ஏறக்குறைய 500க்கு மேற்பட்ட  தமிழக மீனவர்களைச் சாகடித்து விழுங்கி ஏப்பமிடும் ஸ்ரீலங்கா அரசைத் தட்டிக் கேட்காமல்தமிழக மக்களின் விடுதலை வேட்கையின் வடிவ மாக விளஙகும் இத்தலைவர்களை சித்திரவதை செய்வதனால் தனககுத்தான் அழிவினைத் தேடப் போகின்றது.

நாமார்க்கும் குடியல்லோம் என வீரவாழ்வு வாழ்ந்த நாவுக்கரசரை சுண்ணம்பு அறையில் வைத்து வாட்டி வதைத்தும் கல்லைக்கட்டி கடலில் தூக்கி எறிந்ததும் இறுதியில் வெற்றி பெற்றது யார் மன்னிப்புக்கேட்டு மணிமுடி தாங்கிய மகேந்திர பல்லவன் தன்னை மன்னிக்கும் படி நாவுக்கரசர் காலடியில் வீழ்ந்த வரலாறும் சமணம் நீங்கி சிவநெறி பக்தனாக மாறியதும் வரலாற்றில் பதியப்பட்டு
உள்ள ஒரு நிகழ்ச்சி!

பெண் சுமந்த பாகன் மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி தாங்கியதன் விளைவு  பண் சுமந்த மணிவாசகரின் திருவாசகம் எழுந்தது. பாண்டிய மன்னன் இன்று மணிவாசகரின் பாடலைக்கேட்டு உருகிய வரலாற்றினைத் திருவாசகம் எடுத்துரைக்கின்றது.
இறுதியாகக் கப்பலோட்டிய வா.உ.சியை செக்கிழுக்க வைத்த பிரித்தானியப் பேரரசிற்கு என்ன முடிவு ஏற்றபட்டது! இனத்தின் விடுதலை என்பது தாக்குகின்ற சக்தியை விடத் தாங்குகின்ற சக்தியில்தான் ஒரு இனத்தின் விடுதலை அமையும். இதற்கமைய தமிழீழ மக்களுடைய விடுதலையும். தமிழக மக்களுடைய விடுதலை வேட்கையும் ஒருங்கே கிளர்ந்தெழுந்து தமிழீழ விடுதலைக்கும் தமிழக விடுதலைக்கும் வழிவகுக்கப் போவது உறுதி. 

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை என்று பாவேந்தர்    பாடலைப்பாடி அன்று ஹிந்தியை எதிர்த்த கலைஞர் இன்று தன் வசதிக்காக எம்மை ஏய்த்துப்பிழைக்கும் தலைவனாக மாறியிருப்பது வரலாறு வசைபாட வழி சமைக்கின்றது.
 


மா.க.ஈழவேந்தன் 
(முன்னாள் இலங்கை பா.உ) 
நாடுகடந்த தமிழீழ அரசு- கனடாப்பேராளர்



















Tuesday, July 13, 2010

தொடரும் தமிழினப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு முடிந்துவிடவில்லை தமிழினப் படுகொலை. இன்றும் இலங்கையில் காணமற்போவரும், கண்முன்னால் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் ரகசியத் தடுப்புமுகாம்களிலும் அரங்கேறிவருவதோடு மாத்திரமல்லாமல் அன்றாடம் தங்கள் தொழில் தேவைகளுக்காக கடல் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் தமிழ் கடற்தொழிலாளரையும் பகிரங்கமாகச் சுட்டுக்கொலைசெய்து வருகின்றது இலங்கை இனவெறி அரசு.
.இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்த இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். 
First Published : 13 Jul 2010 01:58:55 AM IST

சென்​னை​யில் திங்​கள்​கி​ழமை கைது செய்​யப்​பட்ட நாம் தமி​ழர் இயக்​கத் தலை​வர் சீமான்.
சென்னை, ஜூலை 12: வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் சென்னையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார். அப்போது, வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக அவர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்காக அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை காலை சீமான் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, பத்திரிகையாளர் மன்றத்தைச் சுற்றிலும் உள்ள எல்லா சாலைகளிலும் 200-க்கும் மேற்பட்ட போலீஸôர் நிறுத்தப்பட்டிருந்தனர். செய்தியாளர்களைச் சந்திக்கும் முன் சீமானைக் கைது செய்வதற்காக போலீஸôர் தயார் நிலையில் காத்திருந்தனர்.

இந்தச் சூழலில் வேகமாக கார் ஒன்றில் வந்த சீமானை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போலீஸôர் மறித்து, கைது செய்தனர்.

அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதைக் கண்டித்து நான் பேசியதை, இந்திய - இலங்கை நட்புறவைக் கெடுக்கும் விதத்தில் நான் பேசியதாகக் கூறி என் மீது வழக்குத் தொடரப்ட்டுள்ளது.

இதே பிரச்னைக்காக, தி.மு.க. சார்பிலும் இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அது மட்டும் நட்பை வளர்க்கக் கூடியதா?

தமிழக மீனவர்களைக் கொன்றதைக் கண்டித்து நான் பேசியது வன்முறையைத் தூண்டும் எனில், நம் மீனவர்கள் 501 பேரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையின் செயல் வன்முறையைத் தூண்டாதா?

இப்போது மீண்டும் இலங்கை கடற்படை நம் மீனவர்களைத் தாக்கியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். மாறாக, பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் என் மீது வழக்கு தொடரப்படுகிறது. இதுதான் தீர்வா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

கைது செய்யப்பட்ட சீமான், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

ஜூலை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

வைகோ கண்டனம்: சீமான் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு, தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்வதைக் கண்டித்து பேசியதற்காக சீமானை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தனது அமைச்சர் மூலம் முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார். இலங்கை அரசைப் பற்றி பேசுவோரை சிறையில் தள்ள புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் கூறுகிறார்கள்.

சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துரிமையை ஒடுக்க அடக்குமுறையை ஏவும் தி.மு.க. அரசை எதிர்த்து ஜனநாயக சக்திகள் போராட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்
Source: .http://www.dinamani.com
Kindle Wireless Reading Device, Free 3G, 6" Display, White, 3G Works Globally - Latest Generation


Thursday, July 1, 2010

இளந்தமிழ் 01.07.2010

Ilanthamizh Binder 6                                                             Avatar (Two-Disc Blu-ray/DVD Combo) [Blu-ray]RecoveryRecovery